எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மையை பின்பற்றும் ரசிகர்கள்!

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாளில் (24.12.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூரும் விதமாக தங்களால் முடிந்தவரை பல்வேறு உதவிகளையும் சேவைகளையும் செய்து எம்.ஜி.ஆருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சார்பில் புரட்சித் தலைவரின் நினைவுநாள்  நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெரு, கனி ரெசிடன்ஸ் மீட்டிங் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீண்ட காலமாக எம்.ஜி.ஆர் ரசிகர்மன்ற ரசிகராகவும், அ.தி.மு.க. உறுப்பினராகவும் உள்ள மூத்தத் தொண்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் தலைவர் மு.பாலகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சத்யா இலட்சுமணன் முன்னிலை வகித்தார்.
பி.சி.மணி, கே.மிக்கேல் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள்

1972-ம் ஆண்டு முதல் இன்றுவரை எம்.ஜி.ஆர் ரசிகராகவும், அ.தி.மு.க. தொண்டராகவும் இருந்துவரும் மூத்த உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. 50-வது ஆண்டு பொன்விழா கேடயம், வேட்டி, சட்டை, 5 கிலோ அரிசி, அ.தி.மு.க. 50-வது ஆண்டு நினைவுப் பரிசு எவர் சில்வர்தட்டு ஆகிய பொருட்களை,

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளரும், தமிழக சுற்றுலா வாரிய முன்னாள் அலுவலருமான நெல்லை எஸ்.எஸ்.மணி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் 1972ம் ஆண்டு முதல் இன்றுவரை அ.தி.முக. தொண்டராக இருந்துவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஜேசுராஜ், வி. டி.தங்கம், நெப்போலியன், புதியம்புத்தூர் ராஜா,

ஆறுமுகநேரி அமிர்தராஜ், திருச்செந்தூர் விஜயராகவன், தூத்துக்குடி பழனி, பால்ராஜ், வின்சென்ட், ராஜேந்திரன், சுப்பிரமணியன், என்.ராமகிருஷ்ணன், என்.வீரபாண்டியன், பொன்னம்பலம், சகாயராஜ், மற்றும்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர்,

இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் ஜெ.தனம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பிரபாகர், தலைமைக் கழகப் பேச்சாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மறைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பி.ஜனார்த்தனம், இரா.குமாரவேல் நன்றியுரை கூறினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை சத்யா இலட்சுமணன், பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

– மு.சத்யா இலட்சுமணன்
9443433421

You might also like