எதையோ தேடி நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!

வாசிப்பின் ருசி:

சூரியனை, ஆற்றங்கரை மணலை,
தொட்டாற்சுருங்கிச் செடியை,
பாசஞ்சர் ரயிலின் அற்புத இரைச்சலை,
பட்டாம்பூச்சியைத்
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை!

– கல்யாண்ஜி

You might also like