பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?

செய்தி:

இறந்த பெண்ணை உயிர்த்தெழ மோசடி செய்ததாக போலே பாபா மீது புகார்.

கோவிந்த் கேள்வி:

போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா, இல்லையா? என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இவர்களை அதே சாமியாரால் உயிர்பிக்க முடியுமா? என்பதையும் நேரடியாக நிகழ்த்திக் காட்ட முடியுமா?

அதோடு தலைமறைவாக இருக்கிற போலே பாபா காவல்துறை கஸ்டடியின் கீழ் சிக்குவாரா?

You might also like