நினைவுகளால் நிறைந்த புகைப்படங்கள்!

பிரபல நடிகரும் ஓவியருமான சிவகுமார் அவரின் 50-வது திருமண நாளை அவரது இல்லத்தில் அவருடன் ஒன்றாகப் படித்த ஓவியக் கல்லூரி நண்பர்களுடன் கொண்டாடினார்.

சிவகுமார் அண்ணனுடன் எனது மூத்த அண்ணன் பொ. சந்திரசேகரனும் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள், ஓன்றாகவே ஓவியம் வரைய தமிழகமெங்கும் சுற்றியவர்கள், ஒன்றாகவே ஸ்பாட் பெயிண்டிங் (Spot Painting) வரைந்தவர்கள்.

1959-லிருந்து இன்று வரை தங்கள் நட்பைக் காப்பாற்றி, போற்றி வருகிறார்கள். நேற்றைய நிகழ்வுக்கு எனது அண்ணனும் சிவகுமார் வீட்டுக்குச் சென்று வந்தார்.

சிவகுமார் அண்ணனும் எனது அண்ணனும் சேர்ந்து இருக்கும் அரிதான புகைப்படத்தை இன்று முகநூலில் யாரோ பதிவிட்டதைப் பார்த்து மகிழ்ந்தேன்.

இந்த புகைப்படத்தில் தொப்பி அணிந்து சைக்கிளைப் பிடித்து கொண்டு நிற்பது நடிகர் சிவகுமார் அண்ணன். புகைப்படத்தின் வலது ஓரத்தில் நிற்பவர் எங்கள் அண்ணன் சந்திரசேகரன்.

– பொ. நாகராஜன்

You might also like