இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!

தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறந்தது.

இதைத் தொடா்ந்து வேலூா், கோயம்புத்தூா், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவா் சீா்திருத்தப்பள்ளி ஆகிய 4 இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனா்.

சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட பின்னா், பெட்ரோல் பங்குகளில் பணியமா்த்தப்படுகின்றனா்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்க் மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, கைதிகளும் சம்பாதித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்கை சென்னை புழல் பகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இதில் 30 பெண் கைதிகள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like