வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசைக்கல்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்குட்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

இந்த முதற்கட்ட அகழாய்வில், 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவை அனைத்தையும் இதே பகுதியில் கண்காட்சியாக சிறு சிறு அரங்குகளாக அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதில் 8 குழிகள் தோண்டப்பட்டு, அவற்றில் இருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் இன்று நடைபெற்ற அகழாய்வுப்பணியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் கண்டெடுக்கப்பட்டது. முன்னோர்கள் தோசை சுட இதைப் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இங்கு நடத்தப்படும் அகழாய்வில் தொடர்ந்து இதேபோன்று, பழங்காலப் பொருள்கள் அதிகம் கிடைப்பதால், தொல்லியல் துறையினா் அகழாய்வுப் பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

You might also like