‘முத்தழகு’ பிரியாமணி எடுத்த நல்ல முடிவு!

பருத்திவீரன் முத்தழகு பாத்திரத்திற்கு தேசிய விருது பெற்று, தென்னிந்திய மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த பிரியாமணி, 2017ல் திருமண பந்தத்தில் இணைந்தார்.

சில ஆண்டுகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், வெப் தொடர்களில் நடித்து வந்தவர், துறையில் ‘ரீ என்ட்ரி’ கொடுத்தார்.

தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக உள்ள பிரியாமணி சினிமாவி நடிப்பதென்றால் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இனி முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்றும்; இரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்டது என்றும் விளக்கமளிதுள்ளார். 

அதனால் தான், குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்தும் வகையிலான காட்சிகளை தவிர்த்து வருவதாகக் கூறியுள்ள பிரியாமணி, இனி நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

You might also like