ஐபிஎல்-லில் முதல் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி அணி!

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடியபோதும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் மட்டும் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 21 ரன்களும், ப்ரித்வி ஷா 13 ரன்களும் எடுத்தனர். அசார் படேல் 17 ரன்களூம் லலித் யாதவ் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 தொடரில் தனது முதல் வெற்றியை பதித்தது.

You might also like