துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியர்!

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 263.3 புள்ளிகள் பெற்ற மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதேபோல் பெண்கள் பிரிவில் பங்கேற்ற 52 பேரில், தகுதிச் சுற்று மூலம் முதல் இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். 

You might also like