மார்ச் 22-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவு!

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தையொட்டி வரும் 22-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

You might also like