சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ளாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி 2021-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜய குமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28- ம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி 5 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சென்னைஉயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

You might also like