அடிக்கடி கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

-விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை

கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7வது முறையாக சிக்கியுள்ளது.

அதிலும் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அடுத்தடுத்து விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானத்தில் வானிலை ரேடார் கருவி வேலை செய்யாதது நடுவானில் கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது.

இதேபோல் டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் நிரப்பும் இண்டிகேட்டர் வேலை செய்யாததால் அவசர அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பில் அஜாக்கரதையாக நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், பாதுகாப்பான விமான நிறுவனமாக, நம்பகத் தன்மையான நிறுவனமாக நடந்துகொள்ள தவறிவிட்டீர்கள் எனக் கூறி, இது தொடர்பாக விளக்கம் கேட்டு விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

You might also like