நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி https://tn.nic.in/ மற்றும் https://www.tn.gov.in/என்ற இணையதளங்களில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like