தமிழக மாணவர்களின் ஆற்றல் திறன் அதிகம்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்ட தொடக்க விழா கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை அவர்களுக்கு வழங்கினார்.

விழாவின் போது பேசிய அவர், “இந்தியாவில் இருக்கக் கூடிய மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது பெருமை கூறிய விஷயம்.

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது.

வெளிநாடுகளில் இருக்கக் கூடிய புதுவித படிப்புகள், பட்டங்கள் அனைத்தையும் நமது மாநிலத்தில் புகுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வில் உயர்வினை கொண்டு வருவதே சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தின் நோக்கம்.

மாணவர்கள் கல்வி கற்கும் சமயத்திலே சமுதாயத்தின் தேவைகளையும் கண்டறிந்து பூர்த்தி செய்யவேண்டும்.

மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சிறிதாக இருந்தாலும் அவர்களின் மனிதநேயம் பெரியது. தமிழ்நாட்டில்தான் ஆற்றல் சக்தி அதிகம். ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகமாக வேண்டும்” எனக் கூறினார்.

You might also like