சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம்!

சென்னையின் குடிநீர் பாதுகாப்புக்கு உடனடியான, நீண்டகாலத் திட்டத்தை ‘சிட்டி ஆப் 1000 டேங்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

இந்த அமைப்பில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ட்ஸ், மெட்ராஸ் டெரஸ், பயோமெட்ரிக்ஸ் வாட்டர் ஆகியவற்றின் நிபுணர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

இந்த அமைப்பின் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கொதே நிறுவன வளாகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிபுணர்கள், “அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையில் தண்ணீர் முழுவதுமாக வற்றும் அபாயம் உள்ளது. மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகரித்து,

அத்துடன் பெருவெள்ளம், கழிவுநீர் மாசு இவற்றால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்த்து, வறட்சியை ஒழித்து இந்த அபாயத்தை மாற்றி காட்டும் திட்டத்தை தான் இந்த சிட்டி ஆப் 1000 டேங்ஸ் அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

இதன் வெள்ளோட்டமாக சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்டில் இந்த அமைப்பின் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தத் திட்டம் மூலம் சென்னையின் நீர் ஆதாரம் வீணாவதைக் குறைத்து, அதனை முற்றிலும் தவிர்ப்பதற்கான வியூகத்தையும் உருவாக்க முடியும்.

மேலும் இந்தத் திட்டம் மக்களுக்கு ஏற்றவாறு, கலாசாரத்துக்குப் பொருத்தமான திட்டமிடலுடன் உள்ளூர்வாசிகள், உள்ளூர் தொழில் நிறுவனங்கள், அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளோம்” என ‘சிட்டி ஆப் 1000 டேங்ஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

You might also like