நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்!
தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நேரலை […]
காலத்தின் சுவடுகள்: சூரிய நிழல் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை!
காலத்தைக் கணக்கிடுவது என்பது மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு முதன்மையான தேவையாக இருந்து வந்துள்ளது.
முடிவுக்கு வந்திருக்கிறதா போர்?
செய்தி: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! – 111 நாட்கள் நீடித்த பதற்றம் முழுமையாக தணிந்தது. கோவிந்த் கமெண்ட்: நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் வரப்போவதன் முன் அறிகுறியாக ஈரானுடனான சமதான ஒப்பந்தத்திற்கு முன் வந்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இன்னும் இஸ்ரேல் மட்டும் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தற்போது எரிபொருளுக்கான கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் இறங்கி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் எரிபொருளின் […]
மேகதாது அணை – கர்நாடக முதல்வரின் அறிவிப்பு!
செய்தி: மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்! – கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார் கோவிந்த் கமெண்ட்: இதே மேகதாது அணை கட்டுவது பற்றி கர்நாடகத்திலிருந்த எத்தனையோ முதர்வர்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். அதை எதிர்த்து தமிழ்நாட்டில், முதலமைச்சராக பொறுப்பிலிருந்தவர்கள் இதுவரை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார்கள். இப்போது கர்நாடக முதல்வரான டி.கே.சிவகுமார் தமிழக முதல்வரான விஜய்யிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறார்?
நயினார் நாகேந்திரனின் ‘சென்ஸிடிவ்’ கேள்வி!
செய்தி: குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி கோவிந்த் கமெண்ட்: தமிழக முதல்வரான விஜய்யைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க உரிமை பெற்றிருக்கும் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியைப் பார்த்து இதேமாதிரி கேள்வி கேட்பாரா?
என் மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆளுநர் உரை: “ஆளுநர் ஆற்றிய உரையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்களே ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்பதையே இது காட்டுகிறது. இதற்காகத்தான் அவர்கள் வெள்ளை அறிக்கையை […]




