Browsing Category
கதம்பம்
சவாலான வாழ்க்கையை ஏற்கப் பழகு!
இன்றைய நச்:
தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது;
பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது;
அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே
சவாலான வாழ்க்கையை வாழ்கிறான்!
- மாவோ
பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகு!
இன்றைய நச் :
எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும்;
ஆனால் அதற்காகக் கப்பல் கட்டப்படுவதில்லை;
கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு
பயணம் செய்வதற்காகத்தான்
கப்பல் தயாரிக்கப்படுகிறது!
– கிரேஸ் முர்ரே ஹாப்பிர்
எதிர்பார்ப்பில்லாமல் இரு!
தாய் சிலேட் :
சுதந்திரமாக இரு;
எவரிடமும் இருந்து
எதையும் எதிர்பார்க்காதே!
-விவேகானந்தர்
அதிர்ஷ்டம் ஒருபோதும் வெற்றியை நிர்ணயிக்காது!
தாய் சிலேட் :
வெறும் அதிர்ஷ்டத்தை
மட்டும் தேடி
ஓடும் போதுதான்,
நாம் கால்கள் இடறி
விழுந்துவிடுகிறோம்!
– ஷேக்ஸ்பியர்
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்!
இன்றைய நச்:
உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள்;
உனக்குள் இருக்கும்
இந்தக் கடவுளை நீ வணங்கினால்
தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்!
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மனிதனின் மிக முக்கியமான பொறுப்புகள்!
இன்றைய நச்:
மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று;
ஒன்று - பகைவனை நண்பனாக ஆக்குதல்;
இரண்டு - கெட்டவனை நல்லவனாக மாற்றுதல்;
மூன்று - படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து
அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்!
– டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
ஒளி கொடுக்கும் விளக்காக இருப்போம்!
தாய் சிலேட்:
எரிகிற விளக்காக இரு;
அப்போதுதான்
பிறருக்கு
ஒளி கொடுக்கலாம்!
– தாகூர்
தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!
பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்…
நேசிப்பதால் உண்டாகும் புரிதல்!
தாய் சிலேட் :
நான் அனைத்தையும்
நேசிக்கிறேன்;
அதனால்தான் என்னால்
அனைத்தையும்
புரிந்துகொள்ள முடிகிறது!
– டால்ஸ்டாய்
துணிவோடு இரு; அச்சம் வராது!
இன்றைய நச்:
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால்
கவலையே வராது;
நீ அறிவாளியாக இருந்தால்
குழப்பம் வராது;
நீ துணிவுள்ளவனாக இருந்தால்
அச்சம் வராது!
– கன்ஃபூஷியஸ்