எதார்த்தமாய் கிடைத்த பாடல் வரிகள்…!

சென்னை மயிலாப்பூர் முத்து முதலி தெருவில், ஒரே அறையில் நகைச்சுவை நடிகர் ‘காமெடி’ ஏ.வீரப்பனும் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரமும் ஒன்றாகத் தங்கி இருந்தனர். நண்பர்கள் சிலரும் அவ்வப்போது வந்து செல்வார்கள்.

தினமும் அதிகாலையில் எழுந்துவிடுவதை வழக்கமாகக் கொண்ட பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டு பாடுவார்.

ஒருமுறை அவருடன் தங்கியிருந்த ஏ.வீரப்பன், ‘தூங்காதீங்க.. தம்பிங்களா.. தூங்காதீங்க.. நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்து இப்படி சோம்பேறி ஆகாதீங்க..?’ என்று யதார்த்தமாகக் கூறினார்.

இதைக் கேட்ட கவிஞர், ‘நண்பா.. ஒரு பாட்டுக்கு பல்லவி கிடைக்காமல் திண்டாடினேன். அருமையான பல்லவியைக் கொடுத்துட்டீங்க?’ என்று கூறி, அப்போதே பாடலை எழுதி அதற்கு மெட்டமைத்து தாளம் போட்டுப் பாடினார்.

அதுதான் எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘தூங்காதே.. தம்பி தூங்காதே…’ என்ற பாடல். அது அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமே பிரபலமாக இருக்கிறது.

  • கோட்டாறு ஆ.கோலப்பன்

நன்றி: தினமணி

#எம்ஜிஆர் #mgr #நடிகர்ஏவீரப்பன் #பட்டுக்கோட்டைகலியாணசுந்தரம் #pattukottaikalyanasudaram #aveerappan #காமெடிநடிகர் #comedyactor #தூங்காதேதம்பிதூங்காதே #thungathethambithungathesong #நாடோடிமன்னன் #nadodimannan

You might also like