தேடுவது
நல்லதாக
இருக்கவேண்டும்
அல்லது
நல்லதால் தேடப்படும்
இடமாக நீ
இருக்கவேண்டும்.
கவிதை
தேடுகிற சொல்லாக
நீ இருக்கவேண்டும்
அல்லது
சொல்லால்
தேடப்படும் கவிதையாக
நீ இருக்க வேண்டும்.
எனினும்
மரணத்தைத் தேடும்
ஆளாக நீ
இருக்கவேண்டாம்
அல்லது
மரணம் தேடிவரும்
ஆளாகவும் நீ
இருக்கவேண்டாம்.
வாழ்வைத்
தேடுபவனாக இரு
அது
உன்னைத் தேடிவரும்
என்றிருக்காதே.
~ ஈரோடு தமிழன்பன்