காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கானக் குயில்கள்!

அருமை நிழல்:

கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும். ஜேசுதாஸின் குரலில், மோகன ராகமும், தோடி, கல்யாணி ராகங்களும் கேட்பது இந்த தலைமுறையினருக்கும் கிடைத்துள்ள பெறும்பேறு.

“நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடலின் மூலம் தனது திரையிசை பயணத்தைத் தொடங்கிய கே.ஜே.ஜேசுதாஸ், இந்த ஐம்பது வருட காலத்தில் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத பாடல்கள்.

திரைப்படப் பாடல்களாக இருந்தாலும், பக்திப் பாடல்களாக இருந்தாலும் பாடல்களைப் பாடும்போது அர்ப்பணிப்பு உணர்வோடு பாடக் கூடியவர் ஜேசுதாஸ். கடின உழைப்பாளியும் கூட. 3 தலைமுறை பின்னணிப் பாடகிகளுடன் இவர் இணைந்து பாடியிருக்கிறார்.

குறிப்பாக, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. லீலா, வாணிஜெயராம், இன்றைய சித்ரா, சுஜாதா போன்ற அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடி பல மென்மையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்தான் ஜேசுதாஸ் என்றால் அது மிகையாகாது.

அதேபோல், 1957-ம் ஆண்டு வெளிவந்த, ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலை முதன்முதலாக பாட, ஏனோ அந்த வெளிவரவே இல்லை.

தொடர்ந்து தெலுங்கு, தமிழ்மொழிகளில் ஒரு சில பாடல்களை பாட ஆரம்பித்தார்.

1962-ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல். இசை எஸ்.எம்.சுப்பையாநாயுடு. மிகவும் கடினமான பாடலும்கூட. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டம் வேறு.

அந்த இளம் வயதிலேயே ஒரே டேக்கில் பாடி அசத்திய ஜானகியை இன்றுவரை ஏராளமான இசை ஜாம்பவான்களே பிரமித்து பார்த்து வியக்கின்றனர். இந்தப் பாடலுக்கு பின் ஜானகியின் பெயர் தென்னிந்தியாவில் பரவத் தொடங்கியது.

70-களின் நடுவே இசையுலகில் புயலென நுழைந்த இளையராஜாவின் வரவுக்குபின் இசையின் தடம் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது. 90-களின் இறுதிவரை ரத்தநாளங்களில் கலந்து போனார் எஸ்.ஜானகி.

எம்.எஸ்.வி தொடங்கி, ரகுமான், அனிருத் வரை நெடிய பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் ஜானகி. அவரது பாடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.

இனிமை வற்றாத ஜானகியின் குரல் ஆண்டுகள் பல கடந்தாலும்  கரைந்துபோகாதது. உணர்ச்சிக்குரலில் பாவங்களை வெடிக்கும் திறன் ஜானகிக்கு மட்டுமே சொந்தம்.

பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது ஜேசுதாஸ் – ஜானகி ஜோடிக் குரல்கள். இருவரும் ஒரு மேடை இசை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்!

You might also like