தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

செய்தி:

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 10.87 கோடி மதிப்புள்ள சுமார் 1.33 லட்சம் கிலோ குட்கா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவிந்த் கமெண்ட்:

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, முந்தைய ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி தடுப்பதற்கான எவ்வளவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகச் சொன்னதும் இவ்வளவு லட்சம் கிலோ கணக்கில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அளவுக்கு புழக்கம் இருக்கிறது என்றால் எவ்வளவு பேர் அந்த போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை எப்படித் தான் முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்?

 

You might also like