ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

அரிய புகைப்படம்:

நடிகர் கார்த்திக் நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் நமக்கு அறிமுகமானார். ஆனால், ‘கார்த்திக் அப்பா யாரு தெரியும்ல. நடிகர் முத்துராமன்’ என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் தெரிந்தார். கார்த்திக்கின் வெற்றியின் ஆரம்பம் அப்படித்தான் அமைந்தது.

கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்‌ஷன்… இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.

எண்பதுகளில் தொடங்கிய கார்த்திக்கின் பயணத்தில்… ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள்.

அன்றைய காலகட்டத்தில், கார்த்திக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள்.

கார்த்திக் செய்த படங்களெல்லாம் வெரைட்டி, பியூட்டி கேரக்டர்கள். அவரைப் போலவே அவரின் ஹேர் ஸ்டைலும் அழகு. அப்போது அவரின் படத்தை வைத்துக் கொண்டு, சலூன் கடைக்குச் சென்று முடி வெட்டிக் கொண்ட ரசிகர்களும் உண்டு.

‘அலைகள் ஓய்வதில்லை’யில் தொடங்கிய கார்த்திக்கின் அலை, இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் அறுபது ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கமுடியாது. மறக்கவே முடியாது.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடித்த சமயம் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

நன்றி: முகநூல் பதிவு

You might also like