அன்பு செலுத்த மட்டுமே தெரிந்த ஜீவன் ‘அம்மா’!

படித்ததில் ரசித்தது:
எழுதத் தெரியாது
படிக்கத் தெரியாது
வசை பாடத் தெரியாது
வஞ்சகம் தெரியாது
கணக்குத் தெரியாது
கண்டிப்புத் தெரியாது
கோலம் தெரியாது
அழகுபடுத்திக் கொள்ளத்
தெரியவே தெரியாது
இந்த
வெள்ளைச் சோளத்துக்கு,
ஒன்று மட்டும் தெரியும்
எல்லாரிடமும்
எல்லாவற்றிடத்திலும்
அன்பு செலுத்தத் தெரியும்
இன்னார் இனியார்
தோட்டம் துரவு
நெல், நிலக்கடலை
மாடு, கன்று
தென்னை, தீப்பெட்டி
எல்லாரிடமும்
எல்லாவற்றிடமும்!
– சிற்பி பாலசுப்ரமணியம்
You might also like