திருடியப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்த திருடன்!

செய்தி:

மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற கவிஞரின் வீடு என்பதை அறிந்து திருடியப் பொருட்களை திருப்பிக் கொடுத்த திருடன். 

கோவிந்த் கேள்வி:

நம்ம பட்டுக்கோட்டையார் முன்பு பாடிய “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்கின்ற வரிக்கு நடைமுறை உதாரணமாக திகழ்ந்திருக்கிறார் இந்தத் திருடர்.

அவருடைய மனதிலும் ஒரு கவிஞரின் வீட்டில் திருடிவிட்டோமே என்கின்ற உறுத்தல் எழுந்து அதே உறுத்தலோடு, அதே ஈரத்தோடு அந்த வீட்டில் திருடியப் பொருட்களை ஒப்படைத்திருக்கிறார்.

ஆக, திருடர்களுக்கும் ஈரமான ஒரு மனம் இருக்கில்லையா?

You might also like