ரசிகர்களின் ராணி த்ரிஷா!

நாம் ரஜினி, கமல் பற்றி சிலாகிக்கிறோம். விஜய்-அஜீத் பற்றி ஆச்சரியம் உண்டு. குறைந்தபட்சம் 20 வருடங்களாக நாயகனாக வலம் வருகிறார்கள். வயதானாலும் ரசிகர்கள் அவர்களின் வயதை பொருட்படுத்துவதில்லை. அவர்களைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் வயதாகிவிட்டால் நடிகைகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களை கதாநாயகிகளாகக் கொண்டாடுவதில்லை. இதில் விதிவிலக்காக த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக உச்ச நடிகர்களுக்கு இணையான ஈர்ப்புடன் வலம் வருகிறார்.

இதற்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் தன்னை திரும்பத் திரும்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவரை ஏற்கிறார்கள். இதனை சாதிப்பது அவ்வளவு எளிதல்ல.

அவர் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட (1999) அழகிப்போட்டியின் வீடியோ இயக்குநர் நான்தான். அப்போது அந்தப் போட்டியில் பங்கு பெற்ற மற்ற எல்லாப் பெண்களையும் விட திரிஷா தனித்துவமாகத் தெரிந்தார். அவர் வெற்றி பெறுவார் என நினைத்தேன். அதே போல் வெற்றி பெற்று மிஸ் சென்னை பட்டம் பெற்றார்.

ஆனால் அப்போது முதல் இப்போது வரை, திரிஷாவின் அழகை விட, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அவருடைய மெனக்கெடல்தான் ரசிகர்ளை வசீகரிக்கிறது.

சதுரங்கப்போட்டியில் ராணிக்குதான் ஆற்றல் அதிகம். அந்த ராணியுடன் அவர் அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை, தன் பிறந்த நாளையொட்டி அவரே எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இன்னும் நான் ராணிதான் என்று அந்த புகைப்படம் வழியாக அவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.

வாழ்த்துகள் திரிஷா! நீங்கள் ராணிதான்!

– நன்றி: செல்வகுமார் முகநூல் பதிவு

You might also like