படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை…

இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன..

சினிமாவில் வரும் ‘சைக்கோ’ – போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவன் சின்னத்துரையையும் அவனது தங்கையையும் இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.

படிப்பில்…
விளையாட்டில்…
ஒழுக்கத்தில்…
திறமையில்… அப்பள்ளியில்
முன்னுதாரணமாக விளங்கியுள்ளான்
சின்னத்துரை.

இவரைப் போல இருங்க என ஆசிரியர் பாராட்டியுள்ளார்.

“இவனெல்லாம் நமக்கு மேலயா?”

“எங்க பேக்க தூக்கிட்டு வா,
பான்பராக் வாங்கிட்டு வா,
பேனா, பேப்பர் வாங்கிட்டு வா… ”

மிரட்டல் அடி, உதை எனப் பல நாட்களாக
டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.

அம்மா சத்துணவுப் பணியாளர்.
அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.
தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர்.

இனி நான் ஸ்கூலுக்கு போகல என அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறான்
சின்னத்துரை.

அம்மாவும் தாத்தாவும் பள்ளிக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.

எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா…
இங்க தான வாழணும்.
சின்னத்துரையையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும்
வெட்டிச் சென்றுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் உயிரிழந்தார்.

காவல்துறை வழக்குப் பதிந்து தனது கடமையைச் செய்துள்ளது.

பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறது.

– தோழர் ஸ்ரீராம்
மாவட்டச் செயலாளர், சிபிஐ (எம்).
திருநெல்வேலி.

You might also like