உழைப்பவனுக்கு ஒரு ஜாண் வயிறு!

கலைவாணர் : மறக்கமுடியாத நினைவுகள்

பகிர்ந்து கொண்டவர்: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி
*
சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தலைவர் மரியாதைக்குரிய கே.டி.கே. தங்கமணி அவர்களைச் சந்தித்து பேசும்போது சொன்னார், “கலைவாணர் கருத்துக்கள் அந்தக் காலத்தில் எங்களுக்கு ‘INSPIRATION’ என்றார்.
அதற்கு அவர் சொன்ன ஒரு உதாரணம்:

“ஒரு படத்தில் என்.எஸ்.கே., புளிமூட்டை ராமசாமியைப் (குண்டாக இருப்பார்) பார்த்து .. “ஏன்டா திருடினாய்” என்று கேட்பார்.

அதற்கு அவர் “எல்லாம் ஒரு ஜாண் வயித்துக்கு தான் அண்ணே” என்று சொல்வார் .
உடனே என்.எஸ்.கே., “எனக்கு ஒரு ஜாண் சரி, உனக்குமா?” என்று பெரிய வயிறு உள்ள அவரைப் பார்த்துச் சொல்லி சிரிக்க வைத்தார்.

ஆனால் உடனே என்.எஸ்.கே சொன்ன கருத்து.

“உழைப்பவனுக்கு ஒரு ஜாண் வயிறு… உழைப்பைச் சுரண்டி தின்பவனுக்கு ஐந்து ஜாண் வயிறு”…. என்று சொல்லி கே.டி.கே அய்யா என்னைத் திகைக்கவைத்தார் …”

You might also like