கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் மகேஷ், அருண் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் சுதன் ஆகியோர் அங்குள்ள கண்மாய் அருகே விளையாடி உள்ளனர்.

சிறிது நேரத்தில் சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் சென்ற சைக்கிள் மட்டும் கண்மாய் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கண்மாயில் சென்று பார்த்த போது சிறுவன் அருண் உடல் மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மற்ற 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட 3 சிறுவர்களின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டது. இது குறித்து புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 சிறுவர்கள் கண்மாயில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like