பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு முடிவு!

சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன.

கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊழியர்கள் பலர் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

பயங்கர சத்தத்துடன் கட்டடம் இடிந்து விழுந்ததால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து எஸ்பிளனேடு காவல்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி தீயணைப்பு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைடுத்து தேசியபேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.

இந்த மீட்பு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர், மற்றும் ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அமைச்சர்  கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் பரத்சந்திரன் மீது எஸ்பிளனேடு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You might also like