மத்தியில் ஆட்சி மாறினால் ஊழல் முடிவுக்கு வரும்!

-டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

மத்தியில் உள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் இந்தியாவில் ஊழல் மொத்தமாக முடிவுக்கு வரும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர பாஜக முயற்சி செய்தது.

ஆனால், அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அந்த முடிவை பாஜக கைவிட்டது.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,

“ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால், டெல்லி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக வாபஸ் பெற்றுள்ளது என்றும் இனி எந்த அழுத்தத்துக்கும் ஆம் ஆத்மி அடிபணியாது என்றும் கூறினார்.

அதோடு, பாஜவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய மட்டுமே தெரியும் என்றும் நாட்டில் ஜனநாயகத்தை மிதிக்க அனைத்து அதிகாரங்களையும் பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் கூறிய கெஜ்ரிவால்,

2050ம் ஆண்டில் கூட பாஜக டெல்லியில் வெற்றி பெற முடியாது என்றும் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் நாட்டில் ஊழல் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

You might also like