ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு!

மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை மறுநாள் முதல் மருந்துகளின் விலை  உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும், குறிப்பாக வலி நிவாரணி, தொற்று எதிர்ப்பு, இருதயம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் உள்ளிட்ட வழக்கமான மற்றும்  அத்தியாவசிய  மருந்துகளின் விலை கட்டாயம் உயர்த்தப்படும்.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள அறிவிப்பில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பரஸ்பரம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 384 அத்தியாவசிய மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை 11% வரை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like