தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி!

தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் மாநிலம் முழுவதும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்  துறை சார்பில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற  இந்தப்  புகைப்படக் கண்காட்சியில் சுமார் 50,000 பேர் கண்டு களித்துள்ளனர்.

கண்காட்சியில் அரசின் பல்வேறு திட்டங்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருந்தன. இதில்  செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு அதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

நிறைவு நாளான நேற்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அதோடு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

You might also like