கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்!

– போக்குவரத்துக் காவல்துறை தகவல்

சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தில் சிக்கியவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அவர்கள் அபாரதம் செலுத்துவதில்லை. இதனால் வழக்குகள் நிலுவையில் தேங்கும் சூழல் ஏற்பட்டது.

இதையொட்டி அதற்கான அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பபட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆறு வாரங்களில் அழைப்பு மையங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளால் 4.922 வழக்குகள் தீர்க்கப்பட்டு. ரூ.5,09,16,000 அபராதம் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5,93,78,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like