விண்வெளிக்குச் சென்ற சர்வதேச வீரர்கள்!

அமெரிக்காவின் கேப் கனாவெரல் நகரிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் மூலம் வியாழக்கிழமை அனுப்பட்ட டிராகன் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்டீஃபன் போவன் மற்றும் வாரன் ஹோபா்க், ரஷியாவைச் சோ்ந்த ஆண்ட்ரே ஃபெத்யேவ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-நெயாடி ஆகியோா் அந்த விண்கலத்தில் இருந்தனா்.

அங்கு ஏற்கெனவே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ, ரஷியாவின் சொ்கேய் ப்ரோகோபியேவ் மற்றும் டிமித்ரி பீட்டலின் ஆகிய மூவருக்கு பதிலாக அவா்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனா்.

முன்னதாக, அந்த மூவரையும் ஆய்வு நிலையத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் அழைத்து வந்த ரஷியாவின் சோயுஸ்-எம்எஸ்-22 விண்கலத்தில் விண்துகள் மோதி கசிவு ஏற்பட்டதால், அதன் மூலம் அவா்களால் பூமி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், திட்டமிட்ட ஆறு மாதங்களுக்கு மேல் அவா்கள் ஆய்வு நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடா்ந்து மேற்கொள்வதற்காக 4 வீரா்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது.

You might also like