மின் இணைப்புடன் ஆதார் இணைக்காத 6 லட்சம் பேரின் நிலை?

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டன. மின்நுகா்வோரின் வசதிக்காக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பணிகள் முடிவடையாததால் அதன்பிறகும், பிப்ரவரி 15-ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று வரை 2.61 கோடி மின்நுகா்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளதாகவும் சுமார் 6 லட்சம் போ் இன்னும் இணைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே இதற்கான காலக்கெடு இன்னும் நீட்டிக்கப்படுமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

You might also like