மாநில மொழிகளில் தீா்ப்புகள் தலைவர்கள் வரவேற்பு!

மகாராஷ்டிரம்-கோவா வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதியின் இந்தக் கருத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடா்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார் என்றும், அவரது கருத்து பாராட்டத்தக்கது என்றும் தீா்ப்புகள் மாநில மொழிகளில் இடம்பெறுவது இளைஞா்கள் உள்ளிட்ட பலருக்கும் பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தலைமை நீதிபதி பேசிய காணொலியையும் தனது பதிவுடன் பிரதமா் மோடி தெரிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் அக்கருத்தை வரவேற்றுள்ளார்.

You might also like