டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்கவும்!

 தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.

அதோடு, 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த, உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்,
மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், மது விற்பனை விலைப் பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

You might also like