ஜெ. மரண அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

– நீதிபதி ஆறுமுகசாமி

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் பேசிய அவர், “ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றி பலர் தன்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு,  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஜெயலலிதா மறையும்போது அவருடைய எடை 100 கிலோவாக இருந்தது. சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், கிரியாட்டின் அளவு பாயிண்ட் 68 மி.கிராம்,  ரத்த அழுத்தம் 120ஆக இருந்தது.  அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள்” என்று கூறினார்.

You might also like