இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பதிலளித்தார்.

அப்போது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020-ம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளன. அதுவே 2021-ம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020ம் ஆண்டு 6,630 ஆகவும், 2021-ம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள்,1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போக்சோ நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

You might also like