அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம்!

மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28-ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைப்படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூலிப்பதுடன், அவரது பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதோடு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like