அசலான தலைமைக்கு ஆதரவு கொடுங்கள்!

– பண்ருட்டி ராமச்சந்திரன்

தந்தி தொலைகாட்சிப் பேட்டியில் ஹரிஹரனின் எந்தக் கேள்விக்கும் நிதானம் மாறாத பதில் முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரனிடம் இருந்து வந்தது. எதற்கும் ஒரு புன்சிரிப்புடன் கூடிய பதில்.

ஒருவிதத்தில் அ.தி.மு.க தொண்டர்களின் மனசாட்சியை அவர் பிரதிபலித்திருக்கிறார்.

அ.தி.மு.க.வில் இருந்தபோது எம்.ஜி.ஆர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தவர் அண்மைக் காலத்திய அ.தி.மு.க.வைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோது வேதனைப்பட்டார்.

“அ.தி.மு.க என்கிற இயக்கத்தால் பலன் பெற்று முன்னேறியவர்களில் நானும் ஒருவன். இன்றைக்கு அந்த இயக்கம் பல பிரிவுகளாகக் கிடக்கிறபோது அதை ஒன்று சேர்க்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன். உடல் நலிந்து விட்டாலும், செய்வேன்.” என்றவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார்.

கடைசியாக அ.தி.மு.க தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பது என்ன? – என்கிற கேள்விக்கு அவர் சொன்ன பதில்.

“போலிகளை ஒதுக்கி அசலான தலைமைக்கு ஆதரவு கொடுங்கள்”

You might also like