ஏ.ஆர்.ரகுமானின் மலேசிய இசை நிகழ்ச்சிக்கு புதுமையான அறிவிப்பு!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் டிஎம்ஒய். யூசுப், பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முறையில் வெளியிடுவது மலேசியாவில் இதுவே முதல் முறை. இந்த சாதனையை, அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக ‘மலேசியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்‘ வெளியிடப்பட்டுள்ளது.

You might also like