ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் கவனம் செலுத்துங்கள்!

-பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இன்று உலகெங்கிலும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. சிறு தானியங்கள் பற்றி புறநானூறு, தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது. சிறுதானியங்கள் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னணி நாடாக உள்ளது.

இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். 

சிறுதானியங்களோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க முடியும். மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்” எனக் கூறினார்.

You might also like