கொரோனா தொற்றுக்கு இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பேர் பலி!

உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருப்பதாகவும், தற்போது இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like