தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து நேற்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 67 ஆயிரத்து 283-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

கொரோனா தொற்றைக் கண்டறிய நேற்று 30 ஆயிரத்து 376 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் தலைநகர் சென்னையில் 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like