பேருந்து விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்!

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதன்படி, மதுராந்தகம் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

You might also like