இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகமாகியுள்ளது.

இதையடுத்து தொற்று பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, “கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,518 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 782 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் நேற்று மட்டும் 2,57,187 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like