போரைத்தடுத்து நிறுத்தக்கூடியவர் நீங்கள் தான்!

பரண் :
*

“மனித குல நன்மைக்காக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி நண்பர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், உங்களுக்கு நான் கடிதம் எழுதுவது அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்று நினைத்து, அந்த வேண்டுகோளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

விளைவு என்ன ஆனாலும் சரி, நான் வேண்டுகோள் விடுத்தாக வேண்டும் என்று ஏதோ ஒரு உணர்வு எனக்குச் சொல்கிறது.

இந்த உலகத்தில் போரைத்தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான் என்பது மிகவும் தெளிவு”

– இப்படி காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதம் இன்றும் முக்கியமான கடிதங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகிறது.

ஆறு மொழிகளில் எழுதவும், 11 மொழிகளில் கையெழுத்திடவும் தெரிந்த காந்தி ஹிட்லருக்குக் கடிதம் எழுதியது 1939 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி.

You might also like