உலக நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்!

-ஐ.நா வலியுறுத்தல்

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்,

“உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

You might also like