நேட்டோ தலையிட்டால் உலகப்போர் வெடிக்கும்!

– அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை தன் வசம் ஆக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

தென் கிழக்கு நகரமான மரியுப்போலிலும் ரஷ்ய விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

ஆனால் உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரை நேட்டோ அமைப்பு நேரடியாக போரில் குதிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் பேசிய ஜோபிடன், “நேட்டோ படைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரே நேரடி போர் ஏற்பட்டால் அது 3-வது போருக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.

3-வது உலகப் போர் போன்ற அபாயகரமான சூழலை தவிர்க்கவே நேட்டோ விரும்புகிறது. அடைக்கலம் தேடி அமெரிக்கா வரும் உக்ரைன் குடிமக்களை திறந்த மனதுடன் வரவேற்போம்.

நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒவ்வொரு அங்குலத்தை இரும்புகரம் கொண்டு பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like